Flash யாதவ் மகா சபையின் சங்கித்தனம். குலசாமி கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும் நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம் ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் ஆயனின் செங்கோல் சிறப்பு புறநானூற்றில் ஆயர்கள் அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு கோட்டை மதுரை அழகர் கோவில் மீனாட்சி ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. குலதெய்வம் வழிபாடு யார் தலைவன் அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே வேலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் மதுரை புதுக்கோட்டை தேனி தூத்துக்குடி திருவண்ணாமலை திருநெல்வேலி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கடலூர் இராமநாதபுரம்

கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும்


கலிங்ககோனாரும்ஆயிரம்வீட்டு #இடையர்களும்

கலிங்க கோனார் யோசனையை சொல்லி முடித்துக்கொண்டு அன்று இரவு கடக்கிறது அதிகாலை விடியல் சேவல் கூவுகிறது

ஆயிர வீட்டு இடையர்களும்
மன்னர் நவாப் அரண்மனைக்கு செல்வதற்கு தயாராக இருந்தார்கள்

அரண்மனையில் சமையல்கள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது
மதியம் உச்சிவெயிலில் நேரத்தில் சமையலும் நடந்து கொண்டிருந்தது கலிங்க கோனாரும் ஆயிரம் வீட்டு இடையர்களும் அரண்மனைக்கு வந்தார்கள்

மன்னர் நாவப் ஆராயிரம் விட்டு இடையர்களுக்கு விருந்து படையலாக எருமை மாடுகளும் கறிகளும் மாட்டு கறி எல்லம் சமையல் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் ஆயிரம் வீட்டு இடையர்கலிருந்து எல்லோரும் வந்தார்கள் ஏற்பாடு செய்து வைத்த போல் ஒருவர் மட்டும் வரவில்லை எல்லோரும் அவரவர் இலையில் உட்கார்ந்தார்கள் சாப்பாடும் பரிமாற தயாராகிக் கொண்டிருந்தது சாப்பாடும் இலையில் போடப்பட்டது அந்த நேரத்தில் ஆயிரம் விட்டு இடையர் இருந்து ஒருவர் மட்டும் அழுது கொண்டு வருகிறார் அந்த நேரத்தில் கலிங்க கோனார் எந்திரித்து என்ன விவரம் கேட்கிறார் என்னப்பா அழுது கொண்டு வருகிறார் என்று அதற்கு நம்ம வீட்டில் பெரிய கிழவி அதாவது ஆச்சி இறந்துவிட்டாள் என்று சொல்கிறார் இதைக்கேட்ட கலிங்க கோனர் எல்லோரும் இலை விட்டு ஏந்திருக்கிறார்கள்

மன்னர் நவாப் செய்தியைக் கேட்டு என்னன்னு கேட்கிறார் இதற்கு கலிங்க கோனார் எங்கள் வீட்டில் பெரிய கிழவி இறந்துவிட்டார் இதன் காரணமாக அங்கு ஆயிர வீட்டு இடையர்களின் இறப்பு இருந்தாள் சாப்பிட மாட்டோம் உடல் அடக்கம் பண்ணி பிறகுதான் சாமி கும்பிட்டுவிட்டு பிறகு தான்
சாப்பிடுவோம் என்று கலிங்க கோனார் சொல்கிறார் இதைக் கேட்ட மன்னன் சரி பெரிய கிளவி அடக்கம் பண்ணிவிட்டு வாருங்கள் நாளை என்று அனுப்பி வைக்கிறார்

கலிங்க கோனார் ஆராயிரம் வீட்டு இடையர்களும் எல்லோரும் வருகிறார்கள் அவரவர் வீட்டுக்கு வந்த பிறகு கலிங்க கோனர்கசொல்கிறார் மன்னரிடம் நாம் பொய் சொல்லி இருக்கோம் அதற்காக ஒரு வைக்கோலை எடுத்து பொம்மை போல் வடிவமைத்து சேலை கட்டி பிணம் எப்படி இருக்குமோ அதுபோல் உருவத்தை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்

அழுகை சத்தம் கேட்கிறது எப்படி பிணம் இருக்கம் வீட்டில் இருக்குமோ அதுபோல் அங்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன பிறகு மாலை பொழுதில் அந்த பொம்மையை வடிவத்தில் உள்ள பெரிய கிழவியை அடக்கம் செய்துவிட்டு வருகிறார்கள் வீட்டிற்கு வந்த பிறகு கலைஞர் கோனார் தன் மக்களிடம் சொல்கிறார் இன்று இரவோடு இரவாக நமது ஊரை விட்டு கிளம்ப வேண்டும் என்று 10 மணி அளவில் எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள் அந்த மக்களும் கலிங்க கோனார் ஊரைவிட்டு கிளம்புவதற்கு தயாராக இருந்து கொண்டிருந்தார்கள் நடுராத்திரி 12 மணி அளவில் அவரவர் பிள்ளைகளையும் ஆடு மாடுகளையும் கூட்டிக் கொண்டு கிளம்பினார்கள் ஊரைவிட்டு ஆயிரம் வீட்டு இடையர்கள் அவரவர் வீட்டில் விளக்கை ஏற்றிவிட்டு கலிங்க கோனார் மகள் திருநமம் அழகி பக்தி கொண்டவாள் ஆயிரம் வீட்டு இடையர்கள் பதளகண்டி அம்மன் சிலை வைத்து வழிபட்டவர்கள் வந்து அம்மன் சிலையும் எடுத்துக்கொண்டு வருகிறார்கள் தென்முகமாமக

ஆயிர வீட்டு இடையர்களும் கலைஞர் கோனாரும் ஊரை விட்டு காலி செய்து புள்ள குட்டிகளையும் ஆடு மாடுகளையும் தென் முகமாக போகிறார்கள் வெள்ளி மறைகிறது விடியற்காலம் சூரியன் உதித்து விட்டது காலை ஒன்பது மணி அளவில் ஆயிரம் விட்டு இடையில் தெரு பக்கம் அதாவது துணி துவைப்பது பவர் வண்ணார் வருகிறார் வந்து பார்த்தபோது கலிங்க கோனார் தன் மக்களையும் காணவில்லை வன்னார்
மன்னருக்கு அரண்மனையில் செய்தியைச் சொல்கிறார்

வண்ணார் எப்படி சொல்லுகிறார் என்றால் ஆயிரம் இடையர்களையும் கலிங்க கோனார் தன் வீட்டில் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு ஊரை விட்டு கிளம்பி விட்டார்கள் என்று இதைக் கேட்ட மன்னர் தன் படைகளை விட்டு தானும் இந்த மக்களை பிடிக்க உத்தரவு விடுகிறார்

திருவெட்டுநல்லுர் ஐயனார் கோயிலும் ஆயிரம் வீட்டு இடையர்கள் தொடர்பு


ஆயிரம் வீட்டு இடையர்களும் திருவெட்டு நல்லுர் ஐயனார் கோயிலும்

ஊர் மக்களும் கலிங்க கோனாரும் ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு தென்முக வருகிறார்கள் தென் முகமாக வரும்போது காவேரி ஆற்றை கடக்க வேண்டும் ஆற்றில் வெள்ளம் அடித்து ஓடிக்கொண்டிருக்கிறது கலிங்க கோனாரும் அந்த ஊர் மக்களும் இந்த ஆற்றை கடக்க வேண்டும் இரண்டு ஆற்று பக்கம் தென்னை மரங்கள் இருக்கின்றது இந்த நேரத்தில் நவாபும் அவருடைய படையும் கலிங்க கோனார் பின் தொடர்ந்து வருகிறது கலிங்க கோனார் மகள் திருநாம அழகி கடவுள் பக்தி கொண்டவர் ஆற்றைக் கடக்க வேண்டும் இரண்டு பக்கங்களும் தென்னைமரங்கள் பாதாளகண்டி அம்மன் வேண்டுகிறாள்

காவேரி ஆற்று பக்கமும் வட கடற்கரையில் இருந்த தென்னை மரங்கள் தென் பக்கம் இருந்த தென்னை மரங்களும் கீழே சாய்கிறது இது இரண்டு பக்கம் சாய்ந்த தென்னை மரங்களில் மேல் ஆயிரம் வீட்டு இடையர்களும் மக்களும் ஆற்றைக் அடைகிறார்கள் கடந்தவுடன் இரண்டு பக்கங்களும் சாய்ந்த தென்னை மரம் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று பாதாள கண்டி அம்மனை திருநாம அழகி வேண்டுகிறாள் திருநாம அழகி வேண்டுதலில் தென்னை மரங்கள் நிமிர்ந்து நின்றன பின்னாடியே வந்த நவாபும் அவருடைய படைகளும் ஆற்றை கடக்க முடியவில்லை இவர்களை விட்டு தன்னுடைய அரண்மனைக்கு செல்கிறார்

ஆற்றைக் கடந்த பிறகு கலிங்க கோனார் ஆயிர வீட்டு இடையர்களும் தென்முகமாக வருகிறார்கள்
திருப்பரங்குன்றம் வில்லிபுத்தூர் சேத்தூர் சிவகிரி புளியங்குடி
வழியாக வருகிறார்கள்
ஆடு மாடுகளையும் தன் மக்களை கூட்டிக்கொண்டு தெற்கு திசை வருகிறார் கலிங்க கோனார் வரும் வேளையில் கிழக்கு பக்கமாக அடர்ந்த காடுகளையும் கடந்து வடக்கு பக்கமாக இடைச்சி பாறை என்ற இடத்தில் தன் மக்களால் கூடாரம் போடுகிறார் தன் மக்களை இடைச்சி பாறை என்ற இடத்தில் வெகுநாட்களாக கலிங்க கோனாரும் ஆயிரம் விட்டு இடையர்களும் வாழ்ந்து வந்தனர் இந்த வேலையில் வடதிசை பக்கமாக யானைகளும் தீபங்களும் பெரும் கூட்டம் வருகிறது இதை பார்த்த கலிங்க கோனாரும் தன்னுடைய மக்களும் மன்னர் நவாப் தான் வந்துவிட்டார் என்று பயத்தில் எழுந்து நிற்கிறார்கள் பின்னர் யானைகளும் தீப்பந்தங்கள் நெருங்கி வந்த போது ஐயா
கலிங்க கோனார் ஆதியிலே நான் முருகன் ஐயா உங்களைக் காக்க வந்தன எனக்கு பொங்கல் வைத்து ஒரு கிடா பழி கொடுத்து என்னை வணங்கி வாருங்கள் நான் உங்கள் மக்களையும் வாம்சத்தையும் காவல் காத்து வருகிறேன் என்றும் சொல்கிறார் அந்த சொல்லும் வேளையில் ஐப்பசி மாதம் கடைசி வெள்ளி அந்த கடைசி வெள்ளியில் கலிங்க கோனார் பொங்கல் வைத்து கிடா வெட்டி பலிகொடுத்து ஆதி முருகனை வணங்கி வருகிறார்கள் ஆயிரம் வீட்டு இடையர்களும் கலிங்க கோனாரும்

நெடுங்காலமாக வாழ்ந்து வந்தார்கள் நேரத்தில் ஆடு மாடுகளை மேய்க்க இடம் தேடுகிறார்கள் கலிங்க கோனார் இடத்தை தேடும் வேலையில் சொக்கம்பட்டி மலையடிவாரத்தில் மேற்கு ஆடு மாடுகளை கொண்டு வந்து அந்த இடத்திலேயே ஆடு மாடுகளை மேய்ச்சல் விற்று அந்த இடத்திலேயே பாதுகாத்து வருகிறார்

தினந்தோறும் சொக்கம்பட்டி பாறையில் தன ஆடுமாடுகளை பாதுகாத்து வந்த கலிங்க கோனார் பால் கரைந்து தன்னுடைய இருக்கும் இடத்தில் கொண்டு போகிறார் தினந்தோறும் இதே வழியில் வெகுநாட்களாக நடந்துகொண்டு போகிறர்
சொக்கம்பட்டி பாறையில் அடுத்து கடந்து போகையில் நீ
வேர் காலில் தட்டுகிறது தினந்தோறும் கலிங்க கோனார் கலில் தட்டுவதை பார்த்த வீட்டில் போய் கோடழி எடுத்துக்கொண்டு வேரை வெட்டும்போது வேரிலிருந்து ரத்தம் வெளியேறுகிறது திருவெட்டு ஐயனார் கோயில் தோன்றுகிறது

முதன்முதலில் தோன்றியது கற்சிலை அய்யனார் கோவில் அதன்பிறகுதான் திருவேட்டை நல்லூர் கோவிலாக மாறியது தற்போது இருக்கும் திருநெல்வேலி பக்கத்தில் புளியங்குடி அமைந்துள்ள திருவேட்டை நல்லூர் அய்யனார் கோவில் ஆடி மாதம் நிகழ்ச்சியில் நடைபெறும்

இக்கோயிலில் திருவேட்டஅய்யனார், திருவாய் அம்மன்-திருநாமஅழகி அம்மன் சன்னதிகளும், தவசிநாதன், சித்தநாதன், பெருமாள்சாமி, வில்லிபுத்தூரார், சுத்தம் பெரியசாமி, பலவேசக்காரன் , கருப்பசாமி, நல்லதம்பிவல்லையாகாரன்,சங்கிலிபூதத்தார்

இக்கோயிலில் இரண்டு காலப் பூஜைகள் நடக்கின்றன. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

Wikipedia

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

கோனார்_கொற்றம்