All posts by edayarviluthugal

தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு

 கடல்போல் தாளாண்மை மிக்க யாதவர் 

தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான்.
“ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை
யாதவர்கோன் வாழ இனிதூழி – போத
மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு

திருக்கைமலர் தந்தான் சிறந்து”
தஞ்சாவூர் எட்டாம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும்.

அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந் நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.

கி.பி. 655ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. சுமார் 850 வரை முத்தரையர்கள் என்ற குறுநில மன்னர்கள் தஞ்சைப் பகுதியை ஆட்சி புரிந்துள்ளனர். கி.பி. 850இல் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து விஜயாலய சோழன் கைப்பற்றித் தஞ்சை சோழர் ஆட்சியைத் தோற்றுவித்தார். பிற்காலச் சோழர்களின் தலைநகராகத் தஞ்சாவூர் திகழ்ந்தது. இராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் (985-1014) தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் எய்தியது. இராஜராஜ சோழனின் மகனரான இராசேந்திர சோழன் கி.பி. சுமார் 1025இல் தனது கலைநகரைத் தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதுரைப் பாண்டிய மன்னர்களின் எழுச்சியால் தஞ்சைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பாண்டியரின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூர் விஜயநகர அரசின் ஆட்சிக்குட்பட்டது.

இந்த விஜயநகர அரசின் ஆட்சிக்காலத்தில்தான் திருப்பதி கோவில் சீர்படுத்தப்பட்டது. எனவே தங்களை யாதவர்கள் என்று அழைத்துக்கொண்ட விஜயநகர அரசனைக் குறிக்கவே “தஞ்சை யாதவர்கோன்” என்ற பெயர் கையாளப்பட்டது.

ஔவையார்கள் என எத்தனைப் புலவர்கள் வாழ்ந்தார்கள்?ஒளவையார் என்று ஒருவர் அல்ல, பலர் இருந்தனர். சங்க காலத்தில் அதியமானோடு நட்புக் கொண்டிருந்த ஒளவையார் ஒருவர். இடைக்காலத்தில் தனிப் பாடல்கள் பாடிய ஒளவையார் இன்னொருவர். நல்வழி போன்ற அறநூல்களைப் பாடிய ஒளவையார் இன்னொருவர். கம்பர் காலத்தில் வாழ்ந்த ஒளவையார் மற்றொருவர். இப்படி குறைந்தது ஐந்து ஒளவை யார்களேனும் தமிழகத்தில் வாழ்ந்திருக்கவேண்டுமென்று தெரிகிறது. இக் காலத்தில் எல்லோரும் காமாட்சி, மீனாட்சி, அர்ச்சனா, கீர்த்தனா என்று பெயர் வைத்துக் கொள்வதைப்போலப் பழங்காலத்தில் ஒளவை என்பது யாவரும் வைத்துக் கொள்ளக் கூடிய பெயராக இருந்தது. இப்பாடலை இயற்றியவர் தனிப் பாடல்கள் பாடிய ஒளவையார்மேலும்

 இச்செய்யுளைப்பற்றிய இன்னொரு தகவல்.

இந்த யாதவர்களின் கடைசி அரசன் பெயர் ஓபள யாதவன். இவன் தஞ்சையின் அரசன் என்றும் சொல்லப் பெறுகிறான். காரணம் புரிபடவில்லை. (ஓபளனைப் பற்றிய கீழே வரும் இந்த வெண்பா இன்னிசை வெண்பாப்போல் தெரிகிறது. ஆனால் தளை எங்கோ இடிப்பது போலவும் தெரிகிறது. கல்வெட்டில் சிதைந்து காண்பதால் இங்கே ஒரு சீரும் குறைகிறது என்பது தமிழ் அறிஞர்களின் கருத்து)

வடதிசை யதுவே வான்தோய் இமையம் தென்திசை ஆய்க்குடி என்று தனது சங்கப்பாடல்களில் தெளிவான சான்றை கொடுத்துள்ளார் நறும்புல் மேய்ந்த கவரி என்பது இமயத்திலே வசிக்கும் மான் வகைகளைச் சார்ந்தது அதை மேற்கோள் காட்டி
உள்ளிர்கள்

வடதிசை யதுவே வான் யோய் இமையம் என்பது #யதுவே என்பது #மக்களை குறிக்கவில்லை ” வடதிசை இமையம்

இடத்தை குறிக்கிறது

                                                                                                 முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே!

ஆழ்க, என் உள்ளம்! போழ்க என் நாவே!
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி, அயல 5
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான்தோய் இமையம்,
தென்திசை ஆஅய் குடி இன்றாயின்,
பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே.

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி

வடதிசையில் உள்ள இமயமலையில் கவரிமான்கள் வாழும். அவை நரந்தம் புல்லை மேய்ந்த பின், குவளை பூத்திருக்கும் குளத்து நீரைப் பருகி, தகர மரத்து நிழலில் உறங்கும். தென்திசையில் ஆய்-குடும்பம் இல்லை எனின் இமயமலையின் எடைப்பெருமையால் உலகம் பிறண்டுவிடும். இப்படிக் கூறுவது ஒருவகை மொழிநயம். வடதிசையில் உள்ள இமயமலையின் பெருமைக்கு ஈடாகத் திகழ்வது தென்திசையில் உள்ள ‘ஆய்’ மன்னின் குடிமரபு என்கிறது இந்தப் பாடல். இப்படிப்பட்ட ஆய் அரசனை முதலிலேயே பார்த்து என் ஙறுமையாப் போக்கிக்கொள்ளாமல் காலம் போன கடைசியில் பார்க்கிறேன “

அதனால் என் உள்ளம் மூழ்கி அழியட்டும். இப்போது பாடும் என் நாக்கு பிளந்துபோகட்டும். அவன் புகழைக் காலம் தாழ்ந்து கேட்கும் என் காது பாழ்ங்கிணறு போலத் தூர்ந்துபோகட்டும். இது தான் இந்த பாடல் விளக்கம்

#இடையர் விழுதுகள்

கோனார் கொற்றம்

முல்லை நிலம் தமிழர்கள்

                                                                                                 

கோட்டை

கோட்டை


”இதை வைத்து அவன் என்ன கோட்டையா கட்டப்போறான் விடுப்பா” என்ற சொலவடையை கேட்டிருப்பீர். கோட்டை பின்புலமாக உள்ள பொருள் என்ன?

கோட்டை என்பது விதை, எல்லை, பாதுகாப்பான சுவர், அரண்மனை எனச்சொல்லுகிறது தமிழ் அகராதி. ”அப்படியானால் கோட்டையை விதைமுதலை வைத்தே கட்டினார்கள்’ என்பதைப்புரிந்துகொள்ளமுடிகிறது.
மதுரை அருகே உள்ள அழகர்கோயிலுக்கு இன்றும் அப்பகுதிசுற்றுவட்டார மக்கள் தங்களது தோட்டம், காடு, வயல்களில் விளைந்த தானியங்களை எடுத்துக்கொண்டு அழகருக்கு காணிக்கையாக செழுத்துகிறார்கள். அதன் பின்னர் அங்குள்ள தானியத்தில் சிறிதளவை எடுத்துக்கொண்டு வந்து அடுத்த ஆண்டு விளைவிக்க விதைதானியத்துடன் கலந்து ‘நல்லா விளைச்சலை கொடுக்கனுமிடா பெருமாளே’ என வணங்குகிறார்கள்.

மன்னர் காலத்தில் இப்பகுதியை சுற்றி இருந்த நிலங்கள் பெரும்பாலும் அழகர்கோவில் மானுவ நிலம். இதனால் விளைந்ததன் குத்தகை பங்கினை ஒப்படை பழக்கம் நாளிடவில் வளமை / பண்பாட்டு / நம்பிக்கைச் செயலாக மாறிவிட்டது என தொ.ப அவர்களின் பதிவையை கவனத்தில் எடுத்துக்கொள்ளவும்.

கோட்டை கட்டுவது எப்படி


நெல் வைக்கோலில் பிரியாக விட்டு அதை பஞ்சாரம், பெட்டிகளுக்கு தூர் அமைப்பது போல் சுற்றிக்கட்டுகிறார்கள். இந்தப்பழக்கம் தற்போது மறைந்து விட்டதால் பைகளில் தானியங்களை எடுத்துச்சென்று காணிக்கை செழுத்துகிறார்கள்.

அழகர்கோயில் முகப்பு வாயில் ”கோட்டை வாசல்” என்ற பெயருடனே இன்றும் அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் தமிழ் பிராமி எழுத்துக்களில் இப்பகுதியில் செல்லும் உப்பு வணிகர்கள் வரி விதித்த செய்தி உள்ளது. இது மன்னர் அசோகர் காலத்து எழுத்துக்கள் என்ற ஆய்வும் உள்ளது.

மேலூர், மதுரை மற்றும் இதரப் பகுதி மக்கள் வணிகர்கள் பழமுதிர்சோலை, நரியூத்து, கோம்பை வழியாக தவசிமடை போய் திண்டுக்கல்லிற்கும் நத்தம் பகுதிக்கும் போய்யுள்ளனர். பிரிட்டீஷ் ஆட்சியில் இப்பதை மூடப்பட்டது.

ஆயர்விழுதுகள்

இடையர்விழுதுகள்

கோனார்கொற்றம்

முல்லைநிலம்தமிழர்கள்

மதுரை அழகர் கோவில் மீனாட்சி

சமய ஒற்றுமையாக்கம்,

இந்து சமயத்தில் பல்வேறு சமயப் பிரிவுகள் இருந்தாலும் சைவம், வைணவம் என இரு பிரிவுகளுக்கிடையில் பெரும் கருத்து வேறுபாடுகளும், ஒற்றுமையின்மையும் இருந்து வந்தது. சைவத் திருவிழா, வைணவத் திருவிழா என சமயங்கள் தொடர்புடையனவாக மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. இரு சமயங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களையும் ஒன்றாக இணைத்து ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் தேனூரில் வைகை ஆற்றில் இறங்கி வந்த அழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும்படியாக விழா மாற்றியமைக்கப்பட்டது. மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், தான் வருவதற்குள் திருமணம் முடிந்துவிடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பிவிடுவதாகவும் புதிய கதையும் புனையப்பட்டது. ஆனால், #மண்டூக மகரிசிக்கு சாபவிமோசனம் தரவே அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே பழையபுராணமாகும்.

இடையர் விழுதுகள்

முல்லை நிலம் தமிழர்கள்

ஆயர் விழுதுகள்

[வேப்பம் பூ மாலை

மதுரை மீனாட்சி பட்டாபிஷேகத்தில் வேப்பம் பூ மாலை அணிவிப்பது ஏன்? என்ற கேள்வி பலரது மனதில் தோன்றியிருக்கும், சிலர் கவனித்தும் இருக்க மாட்டீர்கள், சிலர் அம்மன் தெய்வம் அதனால் வேப்பம் பூ என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் அதில் பாண்டியர் வரலாறு உள்ளது.

பலவகை வாசனை மலர்கள் இருக்கும் போது மதுரை மகாராணிக்கு ஏன் வேப்பம் பூ அணிவிக்கிறார்கள். மதுரை என்பது பாண்டிய தேசம் அன்னை #தடாதகை பிராட்டியார் மலையத்துவச பாண்டியனின் மகளாக பிறந்தாள் என்பதை அறிவோம்.

பாண்டியர்களின் அடையாளம் #மீன் கொடி , #வேப்பம் பூ மாலை.பாண்டிய மன்னர்கள் வேப்பம் பூ மாலை தரித்தவர்கள் என சங்க கால நூல்கள் கூறுகின்றன.

எனவே தான் இன்றளவும் மதுரையை ஆளும் பாண்டிய நாட்டு மகாராணி #மீனாட்சி அம்பிகைக்கு பட்டாபிஷேகம் அன்று வேப்பம் பூ மாலை அணிந்து. தனது நாட்டு மக்களை காண திருவீதி உலா வருகிறாள்.

தேவி சரணம்.

முல்லைநிலைதமிழர்கள்

ஆயர் இடையர் கோனார்

மீனாட்சி என்பது ஒரு குறியீடு பச்சையம்மன் என்பது இயற்பெயர் உழவர்களின் தெய்வமாக மண்ணையும் விவசாயத்தையும் நம்பினர்.தங்களுக்கு படி அளக்கும் மண்ணை பெண்ணுடன் ஒப்பிட்டு அதை தெய்வமாக வழிபட தொடங்கினர்.

பின்னர் பாண்டியர்கள் தங்களது சின்னமான மீனை தங்கள் குலதெய்வமான பச்சையம்மனுடன் இணைத்து மீனாட்சி என புதிய பெயரை சூட்டினர்.

நாயக்கர் ஆட்சி காலகட்டத்தில் சைவ வைணவ இணைப்பிற்காக அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் மீனாட்சி திருக்கல்யாணத்தையும் இணைத்து பெரும் விழாவாக மாற்றினர்.

எப்படி வேளாங்கண்ணி மாதா கோவிலும்,நாகூர் தர்காவும் சாதி,மதம் கடந்து பல்வேறு மக்களை இழுத்து வருகிறதோ அதே போல தான் மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் மீனாட்சி திருக்கல்யாணமும்.

இன்றைக்கு புரட்சிகர ஹிப்பி வாழ்க்கை வாழும் ஆட்கள் நம்மிடையே பெருகி வருகின்றனர்.அவர்கள் வெகுசன மக்களின் நம்பிக்கைகளை எள்ளி நகையாடி தன்னை முற்போக்கு ஆட்களாக காட்டி கொள்வதில் வெற்று பெருமை அடைகின்றனர்.

இவர்கள் எல்லாம் இப்படி பேசுவதன் மூலம் வெகுசன மக்கள் திரளை எளிதாக ஒரு பக்கமாக திரட்ட எளிமையாக உதவி விடுகின்றனர். இவர்களுடன் இந்த விவகாரத்தில் மாற்று மத சகோதர்கள் இணைந்து கொள்ளும் போது அது எளிமையான மடை மாற்றம் செய்யப்பட்டு கொதிநிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நம்மால் நல்லது நடக்கிறதோ இல்லையோ துயரத்தை ஏற்படுத்த கூடாது என்பது எளிமையான பழமொழி.

இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்கு இணங்க ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொண்டால் சமூகத்தில் அமைதி நிலவும் இல்லை நாளொரு பஞ்சாயத்தும் கலவரமுமாக வாழ வேண்டியது தான்.

இடையர்விழுதுகள்

கோனார்கொற்றம்

முல்லைநிலம் தமிழர்கள்

ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

குறிஞ்சியும் முல்லையும் சார்ந்த நில்ங்களில் பழந்தமிழர் சமுதாயம் கால்நடைச் சமுதாயமாக இருந்துள்ளது. ஆநிரை கவர்தல் பற்றியும், ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தொல்லியல் சார்ந்த நடுகற்களும் ஆநிரைப்பூசல்களின் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன.

கால்நடைகளைக் காக்கும் காவல் வீரர்கள் காட்டு விலங்குகளான புலிகள், பன்றிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு சண்டையிடும் சூழலும் அதன் விளைவாகக் காவல் வீரர்கள் இறந்துபடுதலும் அவர்களுக்கு நினைவுக்கல் எழுப்புதலும் “புலிகுத்திக்கல்” போன்ற தொல்லியல் சின்னங்களால் அறியப்படுகின்றன. கோயில்களில் விளக்கெரிக்கும் நிவந்தத்துக்காக ஆடுகளைக் கோயிலுக்குக் கொடையாக அளித்தனர். கோயில் நிர்வாகம்,
ஆடுகளை இடையர்களிடம் ஒப்படைத்து நிசதமும் (நாள்தோறும்) இத்தனை ஆழாக்கு நெய் கோயிலுக்கு வழங்கவேண்டும் என்று நிவந்தத்தைச் செயல்படுத்தியது. இந்த இடையர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது? கல்வெட்டுகள் வாயிலாக

மழைக்காலங்களில் ஆடுகளுக்கு நோவு வந்துச்சுனா மொத்தம் மொத்தமா இறந்துவிடும். அந்த நேரங்கள்ல எங்கபாடு ரொம்பவே கஷ்டமாகிடும். அதுமாதிரியான நேரங்கள்ல, குடைய புடிச்சுக்கிட்டு ஆடு ஓட்டுற கம்பை ஆதாரமா வைச்சுக்கிட்டு கம்புல ஒத்தைக்காலும் தரையில ஒத்தைக் காலும் வைச்சுக்கிட்டு நின்ன மேனிக்கத்தான் தூங்குவோம்.”

இந்த நிகழ்வு, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இடையர்களும் இவ்வாறுதான் நின்றவாறு தூங்கினர் என்று கருதத் தோன்றுகிறது. ஏனெனில்,
பணடைய அரசர்கள் காலத்திலிருந்து நாம் காணும் கோயிற் சிற்பங்களில் இந்நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடையர் ஒருவர் தலையில் முக்காடு போட்டுக்கொண்டற்போல் நீண்டதொரு மறைப்புடன் நின்றவாறு தூங்கிக்கொண்டிருப்பதாகச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயில்களில் எடுத்த ஒளிப்படங்களில் இவ்வாறான சிற்பங்கள் உள்ள படங்கள் இரண்டு என் சேர்ப்பில் இருந்தன. ஒன்று, ஹம்பியில் பார்த்த ஒரு சிற்பம். மற்றொன்று தாரமங்கலம் கோயிலில் பார்த்த ஒரு சிற்பம். அவற்றை இங்கு பகிர்கிறேன்.

இடையர் விழதுகள்

கோனார் கொற்றம்

உறையூர் நாச்சியார்கோவில் கோபுரத்தில் இந்தச் சிலையுள்ளது.

இடைச்சியர் மோர்விற்பது எல்லா தமிழ் இலக்கியங்களிலும் காண்கிறோம். தமிழில் கலம்பகங்களில் இடைச்சியர் பாடல்வரும்
காளமேகம் கண்ட அனுபவம் சுவையானது. மோரில்லாமல் நீர்போல இருந்ததை வாங்கிக் குடித்தபின் பாடியுள்ளார்:

       காரென்று பேர்படைத்தாய் ககனத்து உறும்போது
       நீரென்று   பேர்படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததற்பின்
       வாரொன்று மென்னகிலார் ஆய்ச்சியர்கைப் பட்டதற்பின்
       மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.

குலதெய்வம் வழிபாடு

கடந்த காலத்தில் வாழ்ந்தபோது எழுதப்பட்டது!

ம.செந்தமிழன்

அந்த நாட்களில் அவர்கள் பொய்களை நம்புவார்கள், உண்மைகளைச் சந்தேகிப்பார்கள்.

அந்தக் காலம் நன்மைகளுக்கு ஒவ்வாததாகவும், பாவங்களுக்குப் பக்கபலமாகவும் அமையும்.

அவர்கள் தமக்குள் மோதிக்கொள்வார்களே தவிர, சதிகாரர்களுக்கு எதிராக ஒரு கேள்வியையும் எழுப்ப மாட்டார்கள்.

அறிவைக்கொண்டு வளர்த்த தேசங்கள், அறிவால் அழிக்கப்படும். மனதால் கட்டிய இல்லங்கள், மனதால் காக்கப்படும்.

தமது ஊன் பொசுங்கிக் கருகும் வரை, தீயின் வெம்மையை அவர்கள் உணரப் போவதில்லை. தமது குடல் வற்றி வெடிக்கும் வரை, நீரின் தேவையை அவர்கள் அறிவதுமில்லை.

அமுதாகிய மழை நீர் கற்பாறைகளில் ஒட்டாமல் தெறித்துவிழுவதைப் போல, நன்மைகளைப் பேசுவோர் அவர்களிடமிருந்து விலகி நிற்பார்கள்!

உண்மைகளைப் பேசுவோர் அமைதியை போதிப்பார்கள். இவர்களோ, வன்முறைக்காரர்களின் தலைமையை ஆரவாரித்து ஏற்பார்கள்.

புவியெங்கும் நிலம் நடுங்கினாலும், கடல் பொங்கினாலும், நீர் வற்றினாலும், காற்று சுழற்றினாலும், வெம்மை பொசுக்கினாலும் அவர்களது கவனம் செல்வத்தின் மீதே இருக்கும்.

முதலில் செல்வத்தை இழப்பார்கள். பின்னர், உணவையும் நீரையும் இழப்பார்கள்.

ஒரே ஒரு கணம் நின்று நிதானித்து, ‘என்ன நடக்கிறது உண்மையில்?’ எனச் சிந்திப்போர் இறைக் கரங்களால் அரவணைக்கப்படுவார்கள். ஆனால், அவ்வாறு சிந்திக்க விடாதவகையில் குழப்பங்களும் கூச்சல்களும் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

கூச்சல்களின் ஊடாக உண்மையை நாடத் தெரிந்தோர் தப்பிக்கும் வழியைக் கண்டடைகிறார்கள். குழப்பங்களின் ஊடாக தெளிவைக் காணத் தெரிந்தோர், இறைவழியைக் கண்டுகொள்கின்றனர்.

அநீதிகளுக்கு எதிராகப் பேசவும் சிந்திக்கவும் செயல்படவும் அவர்களுக்கு மட்டும் ஆற்றல் இறக்கப்படும்.

பஞ்சம் வந்த ஊரில் கிணறுகளின் மீதுதான் முதல் தாக்குதல் நடக்கும். அட்டூழியங்கள் மிகுந்த அக்காலத்தில், நன்மை பேசுவோரின் அடையாளங்கள்தான் குறிவைக்கப்படும். ஆகவே, அவர்கள் தமது ஆடைகளை அகற்றிவிட்டு அம்மணமாகிறார்கள். அடையாளங்களைத் துறந்துவிட்டு அடைந்துகொள்கிறார்கள்.

அநீதிக்காரர்களின் வார்த்தைகள் ஒருநாளில், அச்சுறுத்தும். மறுநாளில் இன்புறுத்தும்.

நடப்பது நன்மையா தீமையா எனப் புரிந்துகொள்ளாமல், அந்தக் கூட்டம் சிரிக்கும், அழும்.

சுமப்பது பொக்கிசத்தையா பாவச் சுமையையா என்பதே புரியாமல், அந்தக் கூட்டம் குதிக்கும், சறுக்கும்.

சற்றே திரும்பிப் பார்த்தால், துன்பமற்ற பாதைகள் தெரியும். ஆனால், அக்கூட்டத்தின் பெரும்பகுதியினர் திரும்பமாட்டார்கள்.

அந்தக் காலத்தின் இறுதி நாட்கள் நரகத்தின் இறுதியாகவும், சுவர்க்கத்தின் துவக்கமாகவும் அமையும்.

இணைப்புப் படம்: Paul Gregory

கோனார் _கொற்றம்

யார் தலைவன்

॥தமிழநாட்டு சாதி தலைவர்கள் தான் சார்ந்த சமுதாயம் அறிவாளிகள் ஆகிவிட்டால் தங்கள் பதவிக்கு ஆபத்து என்பதால் தன்னுடைய சமுதாயத்தை முட்டாள்களா ஆகுவதை விரும்புகிறார்கள் அல்லது வைத்துள்ளனர்

தமிழர் குடிகள் ஓர்மை பற்றி இவர்கள் பேசியதில்லை?

தமிழர் குடிகள் ஒற்றுமை வந்துவிட்டால் இங்கு சாதி தலைவர்களுக்கு அமைப்புகளுக்கு வேலையில்லா

அடுத்த தலைமுறைக்கு வழிநடத்தும் தலைவன் எப்படி இருக்க வேண்டும்

ஒவ்வொரு மாநாடு கூட்டம் கூட்டி மக்களை கணக்கு காண்பித்தூ ஆளுங்கட்சி, எதிர் கட்சியோ நம்மளை அடமானம் வைப்பவான் தலைவனா?

நம்முடைய அறிவை தீட்டி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுவான் தலைவான

இடையர் குடி சிந்திங்கள் நீங்கள் சிந்திக்காதவரை அவர்கள் ஏமற்றிகொண்டு இருப்பார்கள்

அனைவரும் பகிருங்கள்

இடையர் _விழுதுகள் கோனார் -கொற்றம்

அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே

அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே,மனிதன் தனது நாகரீக வளர்ச்சியை பல்வேறு பருவங்களாக பகுதிபடுத்தும் போது, முதல் பருவ நாகரீகத்தில் நீர்நிலைகளின் ஆதாரத்தை சுற்றி வாழத்துவங்கியவன்,பின் ஆடையணிந்து, நெருப்பை கண்டறிந்து, ஊமை மொழிகளோடு கூட்டம் கூட்டமாக உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து திரிந்துள்ளான்.அன்றைய தமிழகத்திலும் இவ்வாறு காடு, மலை என்று சுற்றித்திரிந்த ஒரு சிறுகூட்டம், நாகரீக மாற்றத்தில் தன் வழக்காடு சமிஞ்கைகளுக்கும், உடல்மொழிக்கும், ஒலி வடிவம் கொடுத்து தன் கூட்டத்திற்கு மட்டுமே பொருள் புரியும் அவனது வாய்மொழி ஓசைகளுக்கு எழத்துருவம் தொகுத்து, அதற்கு “தமிழ்” என்று பெயரிட்டு, வாழ்ந்து வந்த அன்றைய தமிழகத்தின் அந்த சிறுக்கூட்டம், இன்று உலகம் முழுவதும் 9 கோடியாக விரிந்து, ஈராயிரம் ஆண்டுகள் தொண்மையான தன் மொழியையும் அதன் இலக்கிய மற்றும் வாழ்வியல் நெறிகளையும், தலைமுறை தலைமுறையாக கடந்து, இன்றும் தன் சந்ததிகளுக்கு கொண்டுசெல்லும் பெருமைமிகு தமிழ்க்குடி தாங்கிகளுக்கும், அதன் ஐந்தில் ஒரு பங்கு மக்களான முல்லை நிலத்து மாந்தர்களுக்கு அன்பான வணக்கம்,அரசன் முதல் ஆண்டி வரை எல்லோரது தினசரி ஓட்டமும்,தேவையும் ஒரு சாண் வயிற்றுக்கு ஒரு படியளவு சோற்றுக்காகத்தான், அந்த சோற்றை தரும் களிமண் என்ற கருவறை, தனக்கு தேவையான சக்தியை தானே உயிர்பித்து, தனது “பயிர்வித்துக்களையும்” செழிப்புற்று வளரச்செய்யும் ஆற்றலை இயல்பிலேயே தன்னிடத்தே கொண்டது, இந்த களிமண் என்ற கருவறையை “அதிக விளைச்சல்,புதியபரிமாணம்” என்று கூவிய போலி வணிகர்களை நம்பி என்னற்ற இரசாயன உரமேற்றத்தினாலும், மாற்றுப்பயிர், பணப்பயிர் என்ற சில ஊடுபயிர்களினாலும் இன்று நமது “மண்” தன்னை இழந்து மலடானது.இந்த மண் மலடானது போல் நம் கண்களால் காணயியலாத, இன்றைய ஆரிய அடையாளத்துடன் நாம்நமக்கு வழங்கிக்கொண்டுள்ள ‘யாதவர்’ என்ற புதுப்பெயர், நம்மை, தமிழ் இன அடையாளத்தை விட்டே வேரறுத்து, மலடாக்க முற்பட்டுள்ளது. “மதுரையில் கோவிலை சுற்றி நாயக்கர்களும், மார்வாடியர்களும்,செளராஷ்டியர்களும், யாதவர்களும் என்று வடக்கிருந்து வந்த மக்கள்தான் மதுரையை ஆக்கிரமித்துள்ளனர்” என்ற இரு முகம்தெரியாத நபர்களின் உரையாடலைக் கேட்டேன்.என் மனதில் பெரும் எரிமலையே வெடித்தது..!வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் யாரோ ஒரு சில அதிகார குழுக்கள் முடிவு செய்த “யாதவர் என்ற வடஇந்திய ஒற்றுமைத்திணிப்பினால்” தமிழைத் தாய்மொழியாக கொண்ட இந்த இடைச்சிமக்கள் தமிழகத்திலோ அல்லது இந்த இந்தியப்பெரும் தேசத்திலோ அடைந்த பயன்கள்தான் என்னென்ன..? 1931-லிருந்து இன்று 2014 வரை இத்தனை ஆண்டுகள், தாய்தமிழினத்தின் தொண்மையினமான முல்லைநிலத்து இடைமக்களின் மீது திணிக்கப்பட்ட இந்த வடஇந்திய ஒற்றுமை(யாதவர்) என்ற “சமூக அநீதியின்” இத்தனை ஆண்டுகால கோரமுகம்தான், எமது வரலாறு தெரியாத பிறசமூக மக்களின் அரத்தமற்ற பேச்சு. அவர்களை மடக்கிபேசி எமது வரலாற்றை புரியச்செய்வதைக் காட்டிலும் மிகமுக்கியமான பணி, இந்த அநீதியை பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் இருக்கும் எம்மக்களின் அறியாமை அகற்றப்பட வேண்டும், குறிப்பாக எமது சமுக இளைஞர்கள் “யாதவர்” என்று தங்களை அழைத்துக்கொள்வது ஏதோ கடவுள் கொடுத்த வரம் என்பதைப்போல் மனநிலையில் உள்ளனர். அவர்களின் சிந்தனையை திசைமாற்றி, இடையர் வரலாற்றை பற்றிய உண்மைகளை, மழுங்கடிக்கச்செய்யும் எத்தனையோ நிகழ்வுகள் தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.ஊருக்கு ஒரு சங்கம் என்ற நிலை மாறி, ஆளுகொரு சங்கம் என்ற எண்ணிக்கையில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள எமது முல்லை நிலத்து சொந்தங்களை கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், ஒற்றுமை என்ற ஆசைவார்த்தைகளில் குறிப்பாக நமது தமிழக இளைஞர்களை ஒருங்கிணைத்து பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் தமிழகத்தில் அங்காங்கே உள்ளன.. அவர்களின் நல்ல சில காரியங்களுக்காக வாழ்த்தலாம்.ஆனால், தமிழகத்தில், தமிழர்களின் ஒரு இனமான முல்லை நிலத்து மக்களுக்காக “யாதவர்” என்ற பெயரில் நடத்திவரும் தொண்டுநிறுவன நிகழ்ச்சிகளுக்கு வட இந்திய “யாதவ்” என்ற தலைவர்களை அழைத்துவரக் காரணம் என்னவோ..?தமிழ் பேசும் முல்லை நில மக்களின் ஒரே நலனுக்காகவா இவர்கள் வட இந்திய ஆநிரை மேய்க்கும் அதிகார பலமிக்க “யாதவ்” என்ற மனிதர்களை அடிக்கடி சந்திக்கிறார்கள்.?இவர்கள் என்ன காரணத்திற்காக கேரளா கர்நாடக, மராட்டியத்தை தாண்டி வடஇந்திய மக்களோடு மட்டும் உறவாடி, சிறப்பு விருந்தினர்களை அழைக்க வேண்டும்.கர்நாடகத்தில் ஆநிரை மேய்க்கும் தாழ்த்தபட்ட இனமான, கன்னட குறும்பர்களில் எவராவது ஒரு சிறந்த மனிதரை தங்களின் நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டியதுதானே..? ஏன் அவர்கள் அங்கே தாழ்ந்த இனம் என்ற ஐயமோ..!!சரி, இந்த வட இந்திய யாதவா தலைவர்களின் தமிழக நிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழாக்கள் அரங்கேற்றத்திற்கு பின் நமது இடைச்சி மக்களுக்கு கிடைத்ததுதான் என்ன..?இத்தகைய நிகழ்வுகளின் யதார்த்த காரண காரியங்களை நம் சமூக இளைஞர்கள் தங்களின் அறிவார்ந்த கேள்விகளினால் ஆராய வேண்டாமா..?இத்துனை வேகமான அறிவியல் மாற்றத்திலும் கூட, உலகமே இமை குப்பி பிரமித்துப்பார்க்கும் தமிழரின் வீரத்தை, சல்லிக்கட்டு முலம் எடுத்துறைக்கும் இந்த முல்லை நிலத்து மாந்தர்களையும், இவர்களின்”வரலாற்று வித்துக்களையும்” மழுங்கடிக்கச் செய்யும் செயல்தான் இந்த ஆரிய அடையாளம். தன்னுடைய பாட்டன் முப்பாட்டனின் சரித்திறங்களையும், சாதனைகளையும் புறட்டிப்பார்க்க விருப்பம் இல்லாமல், யாரோ ஒரு வேற்றுமொழிக்காரர்களின் அரசியல் மற்றும் சமுக வளர்ச்சியை தங்களது வளர்ச்சி என்று எப்படி ஒட்டிக்கொண்டு வாழமுடியும்.ஓ..ஒரு வேலை அவனும் ஆநிரை மேய்ச்சல் தொழில் செய்கிறான், அதனால் தான் என்றால்..இந்த உலகெங்கும் எங்காவது ஒரு கூட்டம் ஆநிரை மேய்த்துக்கொண்டுதானுள்ளது, அதனால் அவனையும் அவனது சமுகத்தின் அதிகாரத்தையும் நாம் பயன்படுத்த முடியுமா..? ஏன், இங்கிருந்து 38 மைல்கள் தொலைவில் உள்ள சிங்கள இனத்திலும் ஒரு சிறுக்கூட்டமாவது ஆநிரை மேய்ப்பவர் இருக்கக்கூடும், அவர்களையும் சேர்த்து நமது இயர்பெயர் கோனார் என்பதை மாற்றி ஒரு சிங்களப்பெயர் நமக்கு வைத்துக்கொள்வோமா..?? இல்லை. உண்மை என்னவென்றால் நமது சிந்தனை இந்திய தேசத்தோடு நின்றுவிட்டது.மகாகவி பாரதி தன் பாடல்கள் மூலம் பாரதம் நமது தேசம் என்ற தேசபற்றை நம்மிடையே வளர்த்தார்.. அதற்க்கு முன் நாம் பாரத தேசத்தை ஒரு வடதேசமாகவும், குப்த மற்றும் முகலாய பேரரசாகவும் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறிகின்றோம். இன்று பாரதம், இந்தியா என்று பல மொழி, இனம், சமயம் கொண்ட மக்கள் ஒன்றுபட்டு “சுதந்திரமாக” வாழும் நாடு என்பதிலும், நாம் அனைவரும் இந்தியர் என்பதிலும் வேரொரு கருத்தில்லை.. ஆனால் அதற்காக அடுத்த மொழியரின் இனத்தை தன் அடையாளமாக காட்ட நமக்கு தாழ்வாக அறியவில்லையா..??நல்லவேலை இந்தியதேசத்தின் எல்லை ஆப்தானிய தேசம் வரை நீண்டுவிடவில்லை, இல்லையென்றால் தாலிபான் வரை நமது உறவு விரிந்து மேலும் சிக்களாகியிருக்கும். வேறெந்த சமுகத்திலும் இல்லாத ஒரு “வரலாற்றுப் பிழை” நமக்கு நேர்ந்துள்ளது இதை யாரவது நம்மில் உணர்ந்துள்ளொமா..?உதாரணம்,இங்குள்ள வட்டித்தொழில் (பாரம்பரியம்) நடத்தும் செட்டியார் சமூகத்தினர், இராஜஸ்தான் மார்வாடிகளுடன் உறவாடி தன்னை மார்வாடியர் என்று மாற்றியுள்ளார்களா..??இல்லை. தங்களது தொழில் சார்ந்த மக்களையும் அவரது சமுதாய தலைவர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலையில் சந்திக்க நேரும் தருணம் அவர்களை மரியாதை கலந்த நட்புடன் வரவேற்று இனிய வார்த்தைகளுடன் மட்டுமே நின்றுவருகிறது. நமது நட்பும் அத்துடன் நில்லாமல் அதற்க்கு மேல் நாம் நமது ஈராயிரம் ஆண்டு வரலாற்றை துக்கியெறிந்து நம்மை வடநாட்டு வந்தேறிகளாக, அதுவும் “யாதவர்” என்று சொல் அது “இங்கிலிஸ்காரன்” என்பதைப்போல் அர்த்தமே இல்லாத தமிழில் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.நமது கோன், கோனார், இடையர், ஆயர் என்று நமது தமிழ்ப்பெயர்களில் இல்லை இலுக்கு, நமது எண்ணத்தை தான் மாற்ற வேண்டும்.. உதாரணத்திற்கு இன்றுரஜினிகாந்த் போன்ற ஒருவர் தன்னை ரஜினிகாந்த்க்கோனார் என்று மாற்றிக்கொண்டாலோ அல்லது நமது சமூக ஐ.பி.எஸ் அதிகாரிகள் அனைவரும் தம்பெயரின் பின்னால் கோனார் என்று மாற்றிக்கொண்டாலோ நாம் அனைவரும் நம்மை கோனார் என்றே அறிமுகப்படுத்திக்கொள்வோம் பெருமையுடன்.நமது மற்றொரு உறுத்தல், கோனார் என்று கூறிக்கொண்டால், யாதவரான கிருஷ்ணர் என்ற பரம்பொருள் நம்மை விட்டு விலகி விடுவாரோ என்று.. !! உலகின் எந்த இனம் ஆநிரை மேய்க்கும் தொழில்புறிந்தாலும் அவர்களால் போற்றுதலுக்கும்,வணக்கத்திற்முரிய கடவுளே கிருஷ்ணா பரமாத்மா… ஆனால் தமிழைத் தாய்மொழியாக கொண்ட “இடைச்சி மக்கள் தங்களை “யாதவர்” என்று கூறிக்கொண்டு தமிழகத்தில் பிழைப்புத்தேடி வந்த வந்தேறிகளாக தங்களை அடையாளப்படுத்துவது இந்த இடையர்வரலாற்றுக்கே மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கே இலுக்கு..!இங்கு கடவுளுக்கே தமிழ்ப்பெயர் தாங்கி, தமிழ்ப்பாடலுக்காக தலை சாய்த்தாக வரலாறு உள்ளது.. நம்முடைய வைணவ ஆழ்வார்கள் அனைவரும் தமிழிலேயே தான் அந்த யாதவன் என்ற மாயக் கண்ணனை போற்றி வணங்கியுள்ளனர், அத்தகு சிறப்புற்ற நம்தமிழினத்தை, தமிழ் பெயர்களை என்ன காரணத்திற்காக நாம் விட்டு விலகவேண்டும்..? நாம் நம்மை இடையர், கோன், கோனார், ஆயர் என்று தமிழினப்பெயர் கொண்டு அடையாளப்படுத்தி நம் வரலாற்றோடு இயைந்து வாழ்ந்தால் அந்த கடவுளே மிக்க மகிழ்ச்சிக்கொள்வார்.. இல்லை, இல்லை, நீங்கள் “யாதவர்”என்று கூறிக்கொண்டால் தான் நான் ஆசி வழங்குவேன் என்று எந்த கடவுளும் சொல்லவே இல்லை, அதுவும் கிருஷ்ண பரமாத்மா சொல்லவே இல்லை.தமிழ் கடவுளாகிய முருக பெருமான், பழமுதிர்சோலையில் ஆடு மேய்க்கும்இடையராக அவதரித்து அவ்வையரிடம் திருவிளையாடல் புரிந்ததாக புராணங்கள் கூறுகின்றன.. ஏன் இத்தனை ஆண்டுகாலம் இடையறாக அவதரித்த முருக கடவுள் நம்மிடையே விழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் இல்லை..? சரி, புராணங்களின் நம்பிக்கையை அவரவர் விருப்பத்திற்கே விட்டுவிடுவோம்.. ஆனால் நம்மை சுற்றியுள்ள நமது வரலாற்றுக் கதைகளை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.நமக்குத் தெரிந்த வரலாறு பேசுவோம்.. தமிழகத்தில் நம்மை விட பின்தங்கிய ஒரு “தமிழ்ச்சமூகம்” இந்த 50 ஆண்டுகளில் அசுரவளர்ச்சி அடைந்துள்ளது, இது அந்த சமுதாய மக்களின் தனிப்பட்ட உழைப்பு மட்டுமே காரணம், எந்த ஒரு அரசுதவியும் இன்றி, சுயதொழில் ஒன்றையே ஆதாரமாய், தன் குடும்ப நபர்களின் உழைப்பை மட்டுமே மூலதனம், என்ற அவர்களின் நம்பிக்கை.. இன்று அவர்கள் இல்லாத தொழிலே இல்லை தமிழ்நாட்டில் எனலாம்.வணிகம்- இது என்ன புது தொழில்நுட்பமா நமக்கு.. எங்கள் வீடுகளில் ஆடு, மாடுகளை கடும் வேயிலிலும், சூரைமழையிலும் மேய்த்து(வளர்த்தல் மற்றும் காத்தல்) அதிலிருந்து பால் மோர் தயிர் என்று ஊர் மக்களிடம் வணிகம் செய்து, தன் குடும்பத்தையும், தன் உயிரினும் மேலான கால்நடைகளையும் பேணி பாதுகாத்து வாழும் இடைச்சி மக்களுக்கு புதிதல்ல வணிகம், அது நம் குருதியின் குணம்.நாம் முதலில் நமது சிந்தனையையும் வரலாற்றையும் மீட்டு தமிழராக தமிழ்ப்பெயருடனே இடையர், கோனார், ஆயர் என்றே நம்மை அடையாளப்படுத்த வேண்டும்..தொழில்முறை இன அங்கீகாரம் – இதுதான் இன்றைய அரசு, சாதி அல்லது சமூக குழுக்களுக்கு வழங்கிவரும் “மண்ணின் மைந்தர்கள் அல்லது பூர்வகுடிமக்கள்” என்ற அரசியல்(அரசு முறை) அங்கீகாரம். இந்த பார்பன மேதாவிதனத்தை இன்றைய அரசு அனுமதிப்பதா..? என்பது மற்றொரு தனி விவாதம்..!உண்மையில் இந்துமதத்தின் ஆணிவேர், பிரம்ம ரகசியம் அறிந்தவர்க்கம் என்று தன்னை தானே பெருமை பேசித்திறியும் எந்த ஒரு ஆரியன் தன்னை ஒரு “ஒருங்கிணைத்த தேசிய சாதியாக” கூறிகொண்டதில்லை.. இன்றுவரை தன்னை வாட்டர மொழிபேசும் பிரமணன் காட்டிகொள்கிறான்… அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் அவர்களின் தாய்மொழி என்ன என்பதெல்லாம்.. வேறுஒரு தொடர்கதை..சரி நாம் நம் விசயத்திற்கு வருவோம்..தமிழத்தின் பூர்வகுடி மக்களான முல்லை நிலத்தின் இடையர்களை.. ஒருங்கிணைந்த வடஇந்திய புதுபெயரில் “யாதவர்” என்று கூறிகொண்டதினால்.. யாரோ ஒரு ஆநிரை மேய்க்கும், தமிழ் தாய்மொழி அல்லாத வேறு சில சமூக மக்கள் இந்த மண்ணின் பூர்வகுடி மக்களாக முயன்றுவருகின்றனர்.சமீபத்திய நமது சமூக மாத இதழில் இடையரின் பல்வேறு உட்பிரிவுகள் என்று ரெட்டியார், நாயுடு, நாயக்கர், கொல்லா குருபா(கன்னடம்) பதிவுசெய்துள்ளனர். இந்த அபலத்தை என்னவென்று சொல்வது, அறிவார்ந்தவர்களே கவனம், யாரோ சில தலைவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த மற்றும் செய்துகொண்டுருக்கிற தவறுகளை உங்கள் அறிவார்ந்த கேள்விகளால் நமக்கு நேர்ந்த இந்த வரலாற்றுப்பிழையை திருத்திக்கொள்ள முற்படுங்கள்.. இன்றே சிந்தி, செயல்படு, இல்லை என்றால் நம் அடுத்த தலைமுறை தாய்த்தமிழ் நாட்டில் தன் உரிமை இழந்து அகதியாக நிற்கக்கூடும்.சரி என்னால் என்ன செய்யமுடியும் என்ற கேள்வி கேட்கும், உங்கள் ஒவ்வொருவரின் கேள்விகள்தான் நமக்கு நேர்ந்துள்ள இந்த சமூக அநீதியை துடைத்தெறிய முனையும் துவக்கத்திற்கான மையப்புள்ளி.உங்கள் பணியை… மன்னிக்கவும், உங்களின் கடமையை இவ்வாறு துவக்குங்கள்.உங்கள் வீடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதைக்காட்டிலும் மிக முக்கியமானதும் இதுவே..! உங்கள் வீட்டு குழந்தைகளின் சாதிச்சான்றிதழ்களை தமிழினத்தின் தொண்மையினமான ஆயர் அல்லது இடையர் என்றே பதியவும். தற்சமயம் இத்தகைய பதிவுகள் தமிழகத்தில் மறுக்கப்பட்டே வருகிறது. ஆதலால் இதற்கான கோரிக்கை மனுவை அவரவர் தங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சமர்பிக்கவும். இதை தவிர்த்து வேறெந்த புதுப்பெயரிலும் நம் குழந்தைகளுக்கு சாதிச்சான்று வேண்டாம் என்றே மனுவில் பதியவும். இந்த கோரிக்கை மனுக்கள் திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில் நமது அடுத்தகட்ட நடவடிக்கைப் பற்றி பேசலாம்.குறிப்பு: உங்களின் கோரிக்கை மனுவுடன் தங்கள் குடும்ப ஆவணங்களில் ஏதேனும் ஒன்றில் நமது பூட்டன், பாட்டன் அவர்களின் சாதிப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஆவண நகல்களை சேர்த்து சமர்ப்பிக்கவும்.- #இடையர் _விழுதுகள் #கோனார் _கொற்றம்